Pages

Wednesday, December 14, 2016

ACJU அவகாசம் கேட்டதால் சலீம் மர்சூபின் அறிக்கை மீண்டும் தாமதம்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் உயர் நீதி­மன்ற  முன்னாள் நீதி­ய­ரசர் தலை­மை­யி­லான குழு மேற் கொண்­டுள்ள சிபா­ரி­சு­களை மேலும் ஆராய்­வ­தற்கு உலமா சபை கால அவ­காசம் கோரி­யதால் சட்­டத்­தி­ருத்­தங்கள் தொடர்­பான இறு­தி­ய­றிக்கை எதிர்­வரும் ஜன­வரி 29 ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக குழுவின் தலைவர் உயர் நீதி­மன்ற முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தெரி­வித்துள்ளார்.

Thursday, December 8, 2016

கம்பளை ஸம் ஸம் தயாரிப்பாளருக்கு 2016 ஆம் ஆண்டுக்கான மூன்று நட்சத்திர விருது

மத்திய மாகாண சிறந்த தொழில் முனைவோர்களுக்கு அங்கீகரிக்கும் ஸ்டார் விருது விழா கண்டி ஓக் ரே ஹோட்டல் இல் கடந்த 29.11.2016 அன்று நடைப்பெற்றது  இவ்விழாவில்  கம்பளை ZAM ZAM பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனம்  இவ்வாண்டுக்கான சிறிய அளவிலான உற்பத்தி துறை வகையில் மூன்று நட்சத்திர விருதினை பெற்றுக் கொண்டது. அதனை நிறுவனத்தின் உரிமையாளர் சம்சுதீன் முகமட் சலீம் பெற்றுக்கொண்டார்.

2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்நிறுவனம் தற்போது 5 வகையான உற்பத்பத்திப் பொருட்களுடன் யோகட், ஜெலி யோகட், யோகட் பாணம், தயிர், ஐஸ் பக்கெட் என பல தயாரிப்புக்களுடன்  மத்திய மாகாணத்தில்  ஓர்  சிறந்த பால் உற்பத்தி நிறுவனமாக வளர்ந்து வருகின்றமை குறிப்பிடட்தக்கது. மேலும் ஹலாலான மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் இவ்வுற்பத்திப் பொருட்களுக்கு HAC நிறுவனத்தினால் ஹலால் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்;நிறுவனம் கடந்த 2014/2015 ஆம் ஆண்டுகளிலும் நட்சத்திர விருதினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.



பொப் பாடகர் தாஈயாக மாறினார் - ஜுனைத் ஜெம்ஷித் - அல்லாஹ்வின் பாதையில் செல்லும் வழியில் அவரும் மனைவியும் மரணம்


Image result for junaid jamshed and tariq jameel
Image result for junaid jamshed and tariq jameelபாஸ்தானின் பிரபல பாடகர் Junaid Jamshedஇசையும்,கூத்தும்,குடியும், கும்மாலமும்,ஆட்டமும் என தனது வாழ்கையை ஓட்டியவர். உலகெங்கும் உள்ள உருது மொழிபேசும் இடமெல்லாம் சென்று ஆடிப்பாடி அனைவரையும் மகிழ்வித்து உலக இன்பங்களில் மூழ்கி இருந்தவர். ஆனாலும் அவரது மணவாழ்கையில் சந்தோஷம் இருக்கவில்லை. எப்போது பார்தாலும் மனைவியுடன் கருத்துவேற்றுமை,சண்டை சச்சரவு....ஒருநாள்...மனைவியுடன் சண்டையிட்டுகொண்டு வீட்டில் இருந்து கிழம்புகிறார்.... பொடி நடையாக.....எதிரே உள்ள மஸ்ஜிதில் இமாம் Maulana Tariq Jameel செய்யும் பயான் காதில் விழுகிறது.... "உங்கள் மனைவியர்களுடன் கருத்து வேற்றுமை இல்லாமல் இருக்க...ஒன்றாக ஒரே பாத்திரத்தில் உணவருந்துங்கள். ஒருவருக்கொருவர் அடிக்கடி ஊட்டி விடுங்கள். இந்தக்காரியத்தை நீங்கள் தொடராக செய்வீர்கள் எனில் உங்களிருவரிடையே உள்ள வேற்றுமைகள் நீங்கும். அன்பு பெருகும். ஒருவரை ஒருவர் ஆழமாக நேசம்கொள்ள ஆரம்பிப்பீர்கள்." இதனை தன்காதால் செவியுற்ற Junaid Jamshed... மீண்டும் வீடு திரும்புகிறார். மனைவியை சாப்பிட வருமாறு அழைக்கிறார். என்றும் இல்லாத இந்த புதினமான அழைப்பைக் கண்டு மனைவி திகைக்கிறார். சந்தோஷமாக உணவுகளை எடுத்துவைக்கிறார். ஆளுக்கொரு தட்டை அவர் எடுத்துவைக்க....இவரோ ஒருதட்டை கவிழ்த்து வைத்துவிட்டு மறுதட்டில் மட்டும் இருவருக்கான உணவை எடுத்துகொண்டு "நாம் இன்று ஒரு தட்டில் சாப்பிடுவோம்"எங்கிறார்....மனைவியும் சம்மதிக்க.. இருவரும்....சாப்பிடுகிறனர். இந்த செயல் சில நாள் தொடர்கிறது. வீட்டில் சண்டை சச்சரவுகள் ஒழிந்து அமைதி நிலவ ஆரம்பிக்கிறது. இருவரிடையே அன்பு பெருக ஆரம்பிக்கிறது. இந்த ஒரு செயலே இவ்வளவு மாற்றத்தை தந்தால் இஸ்லாத்தை நான் கடைப்பிடித்தால் எவ்வளவு நலவுகள் உருவாகும் என அவா கொள்கிறார்.தான் செவியுற்ற பயானின் சொந்தக்காரரிடம் சென்று விடையத்தை கூறிட அவரும் Maulana Tariq Jameel ஆலோசனை செய்கிறார் .காலமும் நேரமும் தீனுக்காக செலவாகிட அவர் இசையை வெறுக்கிறார். தான் தன் தொழிலை விடப்போவதாக ஆலோசனை கேட்கிறார். ஆனால் தொழிலை விடாமல் தீனுடைய நலவுக்காக அந்தத்தொழிலை பயன்படுத்துமாறு ஆலோசனை கொடுக்கப்படுகிறது. பின்னர் துன்யாவை,மதுவை,மாதுவை புகழ்ந்து பாடிய அதே குரல் தீனை,படைத்தவனை,அவன் நிஃமத்களை,அவனது தூதர்களை புகழ்ந்துபாடும் குரலாக மாறுகிறது.தீனையும் முழுமையாக அவர் படித்து முடித்தார். உலகெங்கும் சென்று பல்லாயிரக்கணக்கன இளைஞர்களை தீன் பக்கம் திருப்ப கலிமாவை மொழியவைக்க...தீனுல் இஸ்லாத்தில் நுழையவைக்க தன் ஆயுள் முழுக்க செலவிட்டு நேற்று(7.12.2016) அன்று திடீர் விபத்தின் மூலம் ஷஹீதானார், அல்லாஹ்விடமே திரும்பி இருக்கிறார். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர் வழிகாட்டுகிறான்??? அந்த நேர்வழியின்பால் செலுத்தவைத்து அவர்களை இறுதிவரை தீனிலே இஸ்திகாமத்தாக வைத்திருந்து தான் விரும்பிய நேரத்தில் அழைத்தும் கொள்கிறான். மிக்க மேலானவன் அவரை பொருந்திக்கொள்வானாக. அவரது நற்பணிகளுக்கு மிக்க மேலான சன்மானங்களை பரிசளித்து தன் ரஹ்மத்தின் நிழலை கொடுத்தருள்வானாக.