Pages

Tuesday, July 29, 2014

ஜனாதிபதி ராஜபக்சே விமானம் தரையிறங்க கனடா அனுமதி மறுப்பு

ராஜபக்சே விமானம் தரையிறங்க கனடா அனுமதி மறுப்பு

டொரண்டோ, ஜூலை. 29–
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கியூபாவிற்கு பயணம் மேற்கொண்டார். செல்லும் வழியில் அவரது விமானத்துக்கு பெட்ரோல் (எரிபொருள்) தேவைப்பட்டது. அதற்காக கனடாவில் தரை இறங்க அனுமதி கோரப்பட்டது.

ஆனால் அவரது விமானம் கனடாவில் தரை இறங்க அனுமதி தர அந்நாட்டு அரசு மறுத்து விட்டது. எனவே அவர் பயணம் செய்த விமானத்துக்கு அங்கு பெட்ரோல் நிரப்பப்பட வில்லை. இந்த தகவலை லங்காஸ்ரீ ரேடியோவின் ஆய்வாளர் சுதர்மா தெரிவித்தார்.

கனடா அரசின் அதிகார பூர்வமான குழு சமீபத்தில் இலங்கை சென்றது. அக் குழுவை இலங்கை வெளி விவகார மந்திரி ஜி.எல். பெரீஸ் அவமதித்து அனுப்பியதாக தெரிகிறது. அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இலங்கை அதிபரின் விமானம் தரை இறங்க கனடா அரசு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இறுதி கட்ட போரின் போது இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது. அது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றியுள்ளது. அதற்கு கனடாவும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.maalaimalar.com/

No comments:

Post a Comment