Pages

Wednesday, November 19, 2014

அமைச்சர்களின் உத்தியோகபூர்வ காரியாலயங்கள் காலி

rj
கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட்ட சில அமைச்சர்களும், ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது உத்தியோகபூர்வ காரியாலயங்களின் பிரத்தியேகப் பொருட்களை அப்புறப்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பொருட்களை அப்புறப்படுத்தியதாக வந்த தகவல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்ட்போது, அவர் சிரித்துக்கொண்டே நழுவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://dailyceylon.com/

Sunday, September 21, 2014

ஹரீன் பெர்னாண்டோ பெற்ற விருப்பு வாக்குகள் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சாதனை.....

Sunday, August 31, 2014

சில அரசியல்வாதிகள் போல வாக்கு வங்கிக்காக நான் பொய் சொல்ல மாட்டேன் - கம்பளை ஜம்இய்யத்துல் உலமாவிடம் பிரதியமைச்சர் காதர் ஹாஜியார் ஆதங்கம்-


சென்ற 30.08.2014 அன்று கம்பளை ஜம்இய்யத்துல் உலமாவுக்கும், பிரதியமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் அவர்களுக்குமிடையில் ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பொன்று அவருடைய கம்பளை இல்லத்தில் இடம்பெற்றது. அச்சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்-ஹலீமி அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிட்டதாவது:

Friday, August 22, 2014

சிங்கள மன்னர்களின் பாதுகாப்புக்கே வீதியோரங்களில் முஸ்லிம்களைக் குடியமர்த்தினர் – ரணில்

SAMSUNG CSC
ஒல்லாந்தர், போத்துக்கேயர்  காலத்திலும் சிங்கள மன்னர்களைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம்களே முன்னின்றுள்ளார்கள். அதற்காகத்தான் கண்டிக்குச் செல்லும் வீதிகளில் இடை  இடையே முஸ்லீம்களை பண்டைய கால சிங்கள மன்னர்கள் குடியமர்த்தினார்கள் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
முன்னாள் போக்குவரத்து இராஜங்க அமைச்சர் யூ.எல்.எம் பாருக்கின் 50 வருட கால அரசியல் வாழ்வும்  “யூக  பெரலின் துங்கோரல அபிமானய” என்ற  நூலும் நேற்று  பி.எம். ஐ.சி.எச்.ல் வைத்து வெளியீட்டு வைக்கப்பட்டது.

ஐ.தே.க., நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

IMG-20140822-WA021
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுகிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
ஊவா மாகாண சபை தேர்தலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று காலை ஐக்கிய தேசிய கட்சியின் சிரிகொத கட்சித் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஐக்கிய ஐக்கிய தேசிய கட்சியின் இணைத் தலைவர் கரு ஜயசூரிய, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக, தேசிய அமைப்பாளர் தயா கமகே, தவிசாளர் கபீர் ஹாசிம், மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், செயலாளர் நஜா முஹம்மது உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். (ஸ)

Tuesday, August 19, 2014

Telegram : பற்றி விக்கிபீடியா சொல்லும் விடயங்கள் - ஸ்தாபகர்கள் முஸ்லிம்கள் அல்லர்


பற்றி விக்கிபீடியா சொல்லும் விடயங்கள் - ஸ்தாபகர்கள் முஸ்லிம்கள் அல்லர்

இங்கே க்கிளிக் செய்யவும்

Telegram : முஸ்லிம் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட மென்பொருளா?

இன்று சமூகவளையதலங்களில் பரவலாக ஒரு விடயம் பரப்பப்படுகிறது. அதாவது இன்று அதிகமாகப் பயன்படுத்தப்படும் Whatsapp எனப்படும் கைத்தொலைபேசி மென்பொருள் ஒரு யூதனால் வடிவமைக்கப்பட்டதென்றும், எனவே, அதனை நீக்கிவிட்டு ஒரு ஜோர்டானிய முஸ்லிமால் வடிவமைக்கப்பட்ட “Telegram” எனப்படும் மென்பொருளை அனைவரும் பயன்படுத்தவேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
“Whataspp” ஐப் பொறுத்தவரை இது ஒரு யூதனுடைய தயாரிப்பு என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் “Telegram” ஒரு ஜோர்டானிய முஸ்லிமுடைய தயாரிப்பு என்பது நம்பகத்தன்மை அற்ற ஒரு செய்தியாகும்.
இந்த “Telegram” மென்பொருளைப் பற்றி நாம் தேடிப்பார்க்கும் போது, பிரபல இணையதள தகவல் களஞ்சியமாகிய “விக்கிபிடியா” வில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி, “இது ரஷ்யாவில் இருக்கும் VK எனப்படும் பிரபல இணையதளத்தின் உரிமையாளர்களாகிய “நிகலோ” மற்றும் “பவல் ட்ரோப்” எனப்படும் இரு சகோதரர்களால் 2013ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும்.
எனவே நம்பகமான எந்த இணையதளங்களிலும் இது ஒரு ஜோர்டானிய முஸ்லிமின் தயாரிப்பு என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆகவே, ஒரு தகவலைப் பரப்பும் போது அதன் உண்மை நிலையை அறிந்துகொள்வது கட்டாயமாகும்.

Thursday, August 14, 2014

பலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி – ஜனாதிபதி அறிவிப்பு

பலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார்.
பலஸ்தீனின் காஸா நகர் மீது இஸ்ரேலிய சியோனிஸ படை மேற்கொண்டுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களால் காஸா நகர் பெரும் அழிவைச் சந்தித்துள்ளது.
பள்ளிவாயல்கள், பாடசாலைகள் போன்ற வற்றின் மீது வேண்டுமென்றே சியோனிஸ படைகள் குண்டு வீசி தாக்குதல்களை நடாத்தி வருவதால் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை கண்டித்து இலங்கையில் பல்வேறு அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தது. இதன்போது பலஸ்தீனின் மக்களுக்காக இலங்கை அரசு எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், பலஸ்தீனின் மக்களுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக  ஜனாதிபதி அறிவித்துள்ளார். (ஸ)

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

SLTJ1















இஸ்ரேலிய அராஜக அரசினால் பலஸ்தீன் மீது மேற்கொள்ளப்படும்தாக்குதலைக் கண்டித்து ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் மாளிகாவத்தையில் இன்று பிற்பகல் 1 மணி முதல் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டது.
அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையான தௌஹீத் ஜமாஅத் ஆதரவாளர்கள், பெண்கள் பல பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தலைமையகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட வீதி ஊர்வலத்தால் இப்பகுதியில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வார்ப்பாட்டத்தின்போது பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனமான இனச் சுத்திகரிப்பு தாக்குதலை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டியும், அக்கிரமம் புரியும் அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுப்படைகளுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடாத்துமாறு கோரியும், இஸ்ரேலுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகளை நிறுத்தக் கோரியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதேநேரம், ஸ்ரீலங்கா தௌஹித் ஜமாஅத், பொது பல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புக்களுக்கு கொழும்பு, கோட்டை பகுதிகளில் இன்று புதன்கிழமை (13.08.2014) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தப் போவதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்திருந்த போதிலும் அந்த அமைப்பு இன்று எந்த பேரணியையும் நடத்தவில்லை.
SLTJ2SLTJ3SLTJ4SLTJ5SLTJ6SLTJ7SLTJ8SLTJ9SLTJ10SLTJ11
The following two tabs change content below.

Wednesday, August 13, 2014

ISIS ன் உண்மை நிலை வெளியாக ஆரம்பித்து விட்டது.


 ISIS இல் இருந்து விலகிய ஒருவர் வழங்கும் பேட்டி !



அல்துகானை பாராட்டி ஷேக் கர்ழாவி கடிதம் - رسالة تهنئة من الإمام القرضاوي اثر فوز الرئيس أردوغان


رسالة تهنئة من الإمام القرضاوي اثر فوز الرئيس أردوغان في الانتخابات الرئاسية التركية
بسم الله الرحمن الرحيم
فخامة الرئيس التركي المنتخب والمنصور من الرحيم الرحمان ومن أهل الفضل والإيمان ومن جموع الشعب المؤمن بحقوق الإنسان رجب طيب أردوغان حفظه الله ورعاه وسدد خطاه لما يحبه ويرضاه
السلام عليكم ورحمة الله وبركاته وبعد،،
يسرني أن أعلن عن فرحتي الخاصة، وعن فرحة إخواني من علماء الأمة في الاتحاد العالمي لعلماء المسلمين عامة، بفوزكم في الانتخابات التركية.
وإننا نشهد الله تعالى أنك حبيب إلينا، أثير لدينا؛ بل حبيب للشعب التركي وحبيب للأمة الإسلامية والعربية حيثما كانت.
فالحمد لله الذي صدق وعده، ونصر عبده، وأعز جنده.
نفرح جميعا بفضل الله تعالى ورحمته، أن هيأ الرجل المناسب للمكان المناسب، كما قال تعالى: {قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ} [يونس:58].
لقد فاز الشعب التركي بممارسة حقه في اختيار رئيسه قبل أن تفوزوا.
ومن حق الإخوة الأتراك أن يفرحوا جميعا: من انتخبوا أردوغان، ومن لم ينتخبوه؛ لأن خيره سيكون للجميع، وشدته ستكون على المقصر والمخرب من أي فئة .
و من حق الإخوة في غزة، وفي فلسطين أن يفرحوا؛ لأن أحد فرسانهم المأمولين قد نجح، وأعلن ترحيبه بعلاج كل جريح أو مريض يأتي من غزة.
و من حق الإخوة في مصر، وفي تونس وفي المغرب وفي سوريا، وفي العراق، وفي ليبيا، وفي اليمن، وفي الصومال وفي السودان وفي سائر بلاد العرب و الاسلام
وفي كل بلد يطلب الحق والقوة والحرية؛ أن يعلن فرحته بنصر الله الذي نصر أردوغان.
ومن حق المسلمين في أنحاء العالم أن يفرحوا بأن لهم صوتا قويا يدافع عنهم.
لقد أولاكم الشعب التركي ثقته الغالية، في أول انتخابات رئاسية مباشرة، وجاء فوزكم الحاسم تعبيرا عن اقتناعه العميق بإنجازاتكم الكبيرة، وسياستكم الحكيمة تجاه بلدكم العظيم تركيا.
جاءت هذه الانتخابات لتؤكد على جدارة الشعوب الشرقية، العربية والمسلمة لممارسة حقها في اختيار من يحكمها، من غير وصاية خارجية عليها، وعلى حقها في الحرية والكرامة والديمقراطية، وليس كما يريد المستبدون في بلادنا، إعادة عقارب الساعة إلى الوراء، وأن يكون من يملك القوة، لا سيما العسكرية منها، هو من يحكم، رغما عن إرادة الشعب.
نرجو لكم مزيدا من النجاح والتوفيق في تحقيق آمال وطموحات الشعب التركي، ونتوقع منكم – كما هو العهد بكم - مزيدا من الدعم لقضايا العرب والمسلمين والمضطهدين في العالم، وفي القلب منها قضية فلسطين، وعلى يقين من أن فوزكم بداية تاريخ جديد للدولة التركية.
وفقكم الله لما فيه الخير والتقدم لبلدكم، وقواكم على نصرة قضايا الأمَّة العربية واﻹسلامية، وحفظكم الله من كل كيد وسوء.
أخوكم
يوسف القرضاوي
رئيس الاتحاد العالمي لعلماء المسلمين

முஸ்லிமாக மாறியது ஏன்? யுவன் விளக்கம்

Why Islam? Explains Yuvan

இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா. 100 படங்களுக்கு மேல் இசை அமைத்தவர். இசைஞானி இந்து மதத்தில் பக்தி பழம். தேவாரம், திருவாசகத்தை கரைத்து குடித்தவர். சரஸ்வதி தனக்குள் இருப்பதாக நினைப்பவர். அவரது மகன் முஸ்லிமாக மாறியது அதிர்ச்சி அலைகளை உண்டாக்கிறது. நான் ஏன் முஸ்லிமாக மாறினேன் என்பதற்கு யுவன் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: எனக்கு என்னோட அம்மான்னா உயிர். என்னோட கஷ்டங்களில் கூட இருந்தவங்க. தன்னந்தனி தூணாக இருந்து எங்க குடும்பத்தை காப்பாத்தினவங்க. அவங்களோட இழப்பு என்னை மாத்திடுச்சு. ஒரு வேலையாக மும்பை போய்விட்டு திரும்பியபோது அம்மா மரணப்படுக்கையில இருந்தாங்க. நானும், தங்கையும் அவர்களை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம். போற வழியில அம்மா என் கையை இருக்கமா பிடிச்சிருந்தாங்க. திடீர்னு கை நழுவி விழுந்தது. அம்மா எங்களை விட்டு போயிட்டாங்க. ஒரு வினாடிக்கு முன்பு அவருக்குள்ள இருந்த ஜீவன் இப்போ எங்க போச்சுன்னு எனக்குள்ள கேக்க ஆரம்பிச்சேன். அதுக்கான விடை கிடைக்கல.

அம்மாவோட பிரிவு என்னை தனிமைப்படுத்திடுச்சு. ரொம்ப கவலையில இருந்த நேரம் ஒரு முஸ்லிம் நண்பர் மெக்கா போய்விட்டு திரும்பியிருந்தார் அவர் என்னிடம் "யுவன் நீ ரொம்ப கவலையில இருக்கே, தாங்க முடியாத கவலை வரும்போது இந்த முசல்லாவில் (தொழுகைக்கு பயன்படும் தரைவிரிப்பு) கொஞ்ச நேரம் உட்காரு போதும்" என்று கொடுத்துவிட்டுச் சென்றார். எனக்கு நம்பிக்கை இல்லாம அதை மூலையில போட்டேன்.

ஒரு கட்டத்துல அம்மா கவலை ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சது. மன அழுத்தம் அதிகமாச்சு. அந்த முசல்லா நினைவு வந்து அதன் மீது உட்கார்ந்து யா அல்லா... என்னோட பாவங்களை மன்னிச்சு, என்னை இந்த கவலையிலிருந்து வெளியில கொண்டு வந்த விடுன்னு கத்தி கதறினேன். "வா... இஸ்லாத்துக்கு வந்துவிடு"ன்னு எனக்குள்ள ஒரு உள்ளுணர்வு வந்துச்சு. அது ஒரு அற்புதமான உணர்வு. அதை வார்த்தையில் வெளிப்படுத்த முடியாது.

அன்றிலிருந்து அதாவது 2012ம் ஆண்டிலிருந்து திருக்குரான் மொழிபெயர்ப்புகளை படிக்க ஆரம்பிச்சேன். தொழுகை உள்ளிட்ட வழிபாட்டு முறைகளை கத்துக்க ஆரம்பிச்சேன். 2014 ஜனவரியில் முஸ்லிமாக மாறுவது என்று முடிவு செய்தேன். மரணத்தின் தருவாயில் எங்கம்மா "எனக்கு பிறகு நீ தனிமரமாயிடுவே இஸ்லாம்ங்ற மரத்தின் கீழ் ஒதுங்கிக்கோ"ன்னு எங்கம்மா சொன்னதாவே நான் எடுத்துக்கிட்டேன்.

நான் முஸ்லிமாக மாறியது என் அப்பாவுக்கு பிடிக்கல. என் அண்ணனும் அண்ணியும் என் பக்கம் நின்னாங்க. படங்களில் என் பெயர் யுவன் ஷங்கர் ராஜான்னு வர்றதால இன்னும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ரிக்கார்டுகளில் பெயரை மாற்றவில்லை. விரைவில் மாற்றுவேன். என்றார் யுவன். http://cinema.dinamalar.com/

Tuesday, August 12, 2014

POSTPONEMENT NOTICE

POSTPONEMENT NOTICE

images
ජාතික ෂූරා සභාවේ සංවිධානයෙන් අද දින (13/08/2014 බදාදා) තැපැල් මූලස්ථාන ශ්‍රවණාගාරයේදී  අමාත්‍ය ගරු වෛද්‍ය රාජිත සේනාරත්න පා.ම විසින් “වෛර ප්‍රචාර හා ශ්‍රී ලංකාවේ අනාගත” යන මාතෘකාවෙන් පැවැත්වීමට නියමිතව තිබූ ප්‍රසිද්ධ දේශනය නොවැලැක්විය හැකි හේතුන් මත කල් දමා ඇති බව කණගාටුවෙන් දන්වා සිටිමු.
නැවත පවත්වන දිනය ඉදිරියේදී දැනුම් දෙනුම් ලැබේ.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹஸன் மௌலவி காலமானார்!!

Thursday, August 7, 2014

ஹமாஸை அழிக்க முடியுமா?

ஹமாஸை அழிக்க முடியுமா?

அடிக்கடி எல்லை தாண்டி எல்லை மீறிய பயங்கரவாதச் செயலில் இஸ்ரேல் ஈடுபடுகின்றது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இஸ்ரேல் தன் மீது செய்யப்படும் தாக்குதலுக்கு அளவிற்கு மிஞ்சிய பதிலடிகள் கொடுக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. இஸ்ரேலிற்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. இஸ்ரேலியர்களும் வாழ வேண்டும் எனச் சொல்பவர்களும் உண்டு.

கூட்டத்தை குழப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: வாசுதேவ

Vasudeva_Nanayakkaraஅமைப்புகள் கூட்டங்களையோ, கலந்துரையாடல்களையோ நடத்தும் இடத்திற்குள் பலவந்தமாக எவர் நுழைய முயற்சித்தாலும் அது சட்டவிரோதமானது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக இலங்கையின் சட்டத்தை செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருதானையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்கு பிக்குமார் சென்று தடையை ஏற்படுத்தியமை பாரதூரமான குற்றமாகும். பொலிஸார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படியான சந்தர்ப்பங்களில் பொலிஸார் உரிய முறையில் செயற்படாதது குறித்து ஏற்கனவே பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.என  தெரிவித்ததாக ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன

தமக்கு கிடைத்த செய்தியை தம் நண்பர்களிடையே பகிர்ந்தளிப்பது ஒரு குற்ற செயல் அல்ல : சட்டத்தரணி எம்.எம்.சுஹைர்

இலங்கை முஸ்லிம்களுக்குள் பீதியை ஏற்படுத்தக்கூடிய செய்தியை தொலைபேசி குறுஞ்செய்தி (SMS ) மூலம் பரப்பியதாக குற்றம் சாடப்பட்டு நான்கு முஸ்லிம்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நான்குபேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து கூறும்போது இனவாதத்தை துண்டும் SMS  செய்தியொன்று முஸ்லிம் மக்களிடையே பரப்பப்பட்டு வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் அது குறித்து தாங்கள் தங்களின் விசாரணைகளை ஆரம்பித்ததாகவும் கூறினர்.

Monday, August 4, 2014

ஜனாஸா அறிவித்தல்

ஜனாஸா அறிவித்தல்

பாணந்தறை மெக்சன்ஸ் (மல்டிலக்) உரிமையாளர் அல்-ஹாஜ் ஏ.டப்லியு.எம்.மகீன் காலமானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். பல சமூகப் பணிகளுக்கு, தீன் பணிகளுக்கும் பங்காளராக இருந்த இவருக்கு அல்லாஹ் உயரிய சுவனத்தைக் கொடுக்க வேண்டுமென பிரார்த்திப்போமாக!!!

Thursday, July 31, 2014

இலங்கையில் இஸ்லாத்தின் எதிரிகளின் நடவடிக்கைகள் தொடருகிறது! ஆரம்பமாகும் புதிய திட்டம்

இலங்கையில் இஸ்லாத்தின் எதிரிகளின் நடவடிக்கைகள் தொடருகிறது! ஆரம்பமாகும் புதிய திட்டம்

சென்ற 28-7-2014 அன்று சுவர்ணவரினி தொலைக் காட்சியில் பர்தாவைக் கொச்சைப்படுத்தும் ஒரு காட்சி ஒலிபரப்பப்பட்டுள்ளது. அதனைக் கன்டிக்காமல் இப்படியே விட்டால் தொடர்ந்தும் இவர்கனிள் அக்கிரமத்தை தொடரமல்லவா???

YOUTUBE

மகிந்தவின் அரசியலுக்கு சவக்குழியை தோண்டுகிறார் கோத்தபாய - விக்டர் ஐவன்

தனது சகோதரரான ஜனாதிபதிக்கு மாத்திரமல்லாது அவரது அரசாங்கத்தின் அரசியலுக்கும் சவக்குழியை தோண்டும் நிலைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மாறியுள்ளதாக ராவய பத்திரிகையின் ஆசிரிய ஆலோசகர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவின் இராணுவ நிழலானது வடக்கு கிழக்கு மக்கள் மீது மாத்திரமல்லாது முழு நாட்டிலும் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தனது அன்புக்குரிய தம்பி விரும்பியதைச் செய்வதற்கு இடமளித்துள்ள கொள்கையானது முழு நாட்டிலும் பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் சில அடிப்படைவாத சக்திகளை பாலூட்டி வளர்த்து விட்டதுடன் நின்று விடாமல், அவற்றிற்குப் பாதுகாப்பும் வழங்கியுள்ளார். இதற்கு பொதுபல சேனா சிறந்த உதராணமாகும்.

அரசாங்கத்துக்குள் பெரும் பிளவு !! பிரபல சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் புதிய கட்சி ஆரம்பிக்கின்றார்

upfa 2அரசாங்கத்திற்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர், புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளார். இந்த கட்சிக்கு முதல் முன்னணி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அரசியல் கட்சிக்கு உத்தியோகப் பற்றற்ற அடிப்படையில் தலைமை தாங்க குறித்த பிரபல அமைச்சர் இணங்கியுள்ளார்.
ஜே.வி.பி.யின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், பாணந்துறை மேயருமான நந்தன குணதிலக்க, முன்னாள் முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினருமான அசல ஜாகொட இந்த புதிய கட்சியை அமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tuesday, July 29, 2014

ஜனாதிபதி மகிந்தர் கட்சிக்கு பிளவு! கிளர்ச்சிக்குழு உதயம்

ஆளும் கட்சிக்குள் கிளர்ச்சிக் குழுவொன்று உதயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த கிளர்ச்சிக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையிலான சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவளித்து வரவதாகக் குறிப்பிடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் இந்தக் கிளர்ச்சிக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சிக்காக நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் பாடுபட்டவர்கள் ஓரம் கட்டப்பட்டு, புதியவர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக சிரேஸ்ட உறுப்பினர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர். எவ்வாறெனினும், இந்த கிளர்ச்சிக்குழு பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் பங்களிப்புச் செய்யுமா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

ஜனாதிபதி ராஜபக்சே விமானம் தரையிறங்க கனடா அனுமதி மறுப்பு

ராஜபக்சே விமானம் தரையிறங்க கனடா அனுமதி மறுப்பு

டொரண்டோ, ஜூலை. 29–
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கியூபாவிற்கு பயணம் மேற்கொண்டார். செல்லும் வழியில் அவரது விமானத்துக்கு பெட்ரோல் (எரிபொருள்) தேவைப்பட்டது. அதற்காக கனடாவில் தரை இறங்க அனுமதி கோரப்பட்டது.

ஆனால் அவரது விமானம் கனடாவில் தரை இறங்க அனுமதி தர அந்நாட்டு அரசு மறுத்து விட்டது. எனவே அவர் பயணம் செய்த விமானத்துக்கு அங்கு பெட்ரோல் நிரப்பப்பட வில்லை. இந்த தகவலை லங்காஸ்ரீ ரேடியோவின் ஆய்வாளர் சுதர்மா தெரிவித்தார்.

கனடா அரசின் அதிகார பூர்வமான குழு சமீபத்தில் இலங்கை சென்றது. அக் குழுவை இலங்கை வெளி விவகார மந்திரி ஜி.எல். பெரீஸ் அவமதித்து அனுப்பியதாக தெரிகிறது. அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இலங்கை அதிபரின் விமானம் தரை இறங்க கனடா அரசு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இறுதி கட்ட போரின் போது இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது. அது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றியுள்ளது. அதற்கு கனடாவும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.maalaimalar.com/

Thursday, July 24, 2014

பிறை பார்ப்பது பற்றிய தெளிவு


Explanation on Hilaal sighting by Ash-Shaikh Abdul Wahhaab, Coordinator, Hilaal Division - All Ceylon Jamiyyathul Ulama.

பிறை பார்ப்பது பற்றிய தெளிவு - அஷ்-ஷைக் அப்துல் வாஹ்ஹாப் அல்-ஹுமைதி, இணைப்பாளர், பிறைக் குழு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

Click here...

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக,

இவ்வருட ஷவ்வால் தலைப்பிறை பார்க்கும் நாள் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையாகும். நாட்டில் பல பகுதிகளிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்துள்ள உப பிறைக் குழுக்களோடு சகலரும் ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்து, அத்தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையினூடாக பொது அறிவித்தல் செய்யப்படும். அவ்வுத்தியோகப் பூர்வ அறிவித்தல் வெளிவரும் வரை வழமையான வணக்கங்களில் ஈடுபடுமாறு சகல முஸ்லிம்கள் வேண்டப்படுகிறார்கள்.

Wednesday, July 23, 2014

இதத்தான் எதிர்ப்பார்த்தார்கள்: சந்திரிக்கா, ரணில், ஷிராணி பண்டாரநாயக்க நாளை ஒரே மேடையில் !!

ranil_chandrika
எதிர்க்கட்சித் தலைவர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு மேடையில் சந்திக்க உள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா ஆகியோருடன் முன்னாள் ஜனாதிபதி நாளைய தினம் ஒரே மேடையில் தோன்றவுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறை ஏன் ஒழிக்க வேண்டும் ? என்ற தலைப்பில் கொழும்பு நகர மண்டபத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் கருத்தரங்களில் இவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கருத்தரங்கில் கலந்து கொள்வதாக இவர்கள் அனைவரும் அறிவித்துள்ளனர் என நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி ரவி ஜயவர்தன தெரிவித்தார்.
இவர்களை தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய உட்பட அதன் உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர் எனவும் அவர் கூறினார்.
முதலில் இந்த கருத்தரங்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படவிருந்ததுடன் இறுதி நேரத்தில் அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை இந்த கருத்தரங்கில் முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவும் கலந்து கொள்ள உள்ளார். http://puttalamtoday.com/

Monday, July 21, 2014

காஸாவில் போராளிகளுக்கு உதவ ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு!


தோஹா: இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஃபலஸ்தீன் முஜாஹிதுகளுக்கு முடிந்த அளவு உதவுமாறு உலக முஸ்லிம்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர் அவையின் தலைவர் ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதாரரீதியாகவோ, மனிதநேய பணிகள் மூலமாகவோ அல்லது ரமலானின் கடைசிப் பத்துகளில் பிரார்த்தனைகளின் மூலமாகவோ காஸ்ஸா மக்களின் வெற்றிக்காக முயற்சிக்கவேண்டும் என்று கர்ளாவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

’சியோனிஸ்டுகளுக்கு உதவும் அரபு மற்றும் அரபு அல்லாத நாடுகள், மேற்கத்திய சக்திகளின் வெற்றிக்கொடி உயர அனுமதிக்காதே’ என்று கர்ளாவி அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்துள்ளார். காஸ்ஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை மெளனமாக பார்த்துக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்டது என்று கர்ளாவி உலக முஸ்லிம்களுக்கு நினைவூட்டியுள்ளார்.
http://meesanmirror.blogspot.com/

Sunday, July 20, 2014

இலங்கைக்கு எரிபொருள் விற்பனை ; ஈரான் மறுப்பு

iraa
இலங்கைக்கு எரிபொருள்  விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட கருத்தை ஈரான் நிராகரித்துள்ளது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு ஈரான் எண்ணெய் வழங்கவில்லை என தேசிய ஈரான் எண்ணெய் நிறுவன வௌிவிவகார அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை மாற்று வழிகளைப் பயன்படுத்தி ஈரானிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாக வெளியான செய்தியை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.
ஈரானிடமிருந்து நேரடியாக எரிபொருளைப் பெற்றுக் கொள்ளாது வேறு மூன்றாம் நாடொன்றின் ஊடாக இலங்கை ஈரானிய எரிபொருட்களை இறக்குமதி செய்வதாக செய்தி வெளியானது.
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு மூன்றாம் நாடொன்றிடமிருந்து இலங்கை எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.  http://dailyceylon.com/

ஹமாஸின் தலைவர் உலக முஸ்லிம்களை நோக்கி விடுத்த அழைப்பு…!!

hamas-leader-khaled-meshaal-கைபர்-
ஹமாஸ் உங்களிடம் இறைஞ்சி வேண்டுகிறது. புனித ரமழானில் நீங்கள் யஹுதிகளின் அழிவிற்காக துஆ செய்யுங்கள். எமது நிலங்களை நாங்கள் மீட்க துஆ செய்யுங்கள். எமது சகோதரிகளினதும் குழந்தைகளினதும் அநியாயமான இரத்தம் வீணாகாமல் இருக்க துஆ செய்யுங்கள்.
“ஹமாஸ்” காஸாவின் நிலங்களை மட்டுமல்ல அந்த நிலங்களில் வாழும் மக்களின் ஆன்மாக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இயக்கம். அதன் அரசியல் தலைவர் Khaled Mashal. 2004-ல் இஸ்ரேலினால் கொல்லப்பட்ட சகோதரர் அப்துல் அசீஸ் ரன்தீஸி அவர்களின் இழப்பிற்கு பிறகு ஹமாஸின் அரசியல் தலைவராக இருந்து வருபவர். இஸ்ரேலின் சின்-பெட் பல முறை இவரை படுகொலை செய்ய முயன்றும் இறைவன் அருளால் இன்றும் அதன் தலைமமையை கொண்டு செல்பவர்.
உலக முஸ்லிம் உம்மாவிற்கு அதன் இணையத்தளம் ஊடாக ஹமாஸ் சார்பாக அவர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார்.
“ஓஹ்….. எமது உலக முஸ்லிம் சகோதர்களே..!! எங்களிற்கு இங்க என்ன நடக்கிறது என்பதனை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எமது மண்ணை யூத இராணுவம் மீண்டும் ஒரு முறை விழுங்க முற்பட்டுள்ளது. அவர்களிற்கு எதிரான எமது போராட்டம் இதுவரை நடந்ததையும் விட எழுச்சியுடனும் பல அர்ப்பணங்களிற்கு மத்தியிலும் இடம்பெற்று வருகிறது. யஹுதிகள் இப்போது ஒரு புதிய எதிரியுடன் மோதுகிறார்கள்.
ஆம் நாம் அவர்களிற்கு எதிராக பல எதிர்பாராத தாக்குதல் முறைகளையும் சண்டைகளையும் ஆரம்பித்துள்ளோம். இதனை நான் பெருமையுடனும் சந்தோசத்துடனும் இந்த புனிித ரமாழானில் உங்களிற்கு சொல்லிக்கொள்கிறேன்”.
“உலகம் முழுதும் முஜாஹித்கள் போராடுகிறார்கள். அதற்காக தங்கள் உயிர்களை இறைவனின் பாதையில் இழக்கிறார்கள். அது போன்றே காஸாவிலும் புனித யுத்தம் நடக்கிறது. நீங்கள் இந்த சண்டைகளில் பங்கேற்க அவாவுற்றிருப்பீர்கள்.
உங்கள் உளமார்ந்த இந்த எண்ணத்தை ஹமாஸின் சார்பில் பாரட்டுகிறேன். ஆனால் எமக்கு உங்கள் ஆட்பலம் தேவையில்லை. தாராளமாக எமது போராளிகள் அதற்காக திரண்டுள்ளார்கள். எமக்கு ஆயுதங்களும் தேவையில்லை. யஹுதிகளை எதிர்கொள்ளும் மனப்பலம் எம்மிடம் உண்டு. அதுவே எமது பிரதான ஆயுதம். ஆயுத தளவாடங்கள் எம்மிடம் கையிறுப்பில் உள்ளன. அவற்றை காஸாவிற்கு கொண்டு வந்து சேர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.”
“ஓ… எம் அன்பின் முஸ்லிம் சகோதரர்களே..!! எமக்கு மருந்துகள் தேவை. காயப்படும் எமது சகோதரிகளையும், சகோதரர்களையும் காப்பாற்ற அவை தேவைப்படுகின்றன. மேலும் வைத்தியர்கள் தேவை. யஹுதிகள் வீசும் குண்டுகள் அபாயகரமானவை. அவை எமது உடன் பிறப்புக்களை படுகாயப்படுத்துகின்றன. எமது குழந்தைகளிற்கு பால்மா தேவை. இந்த ரமழானில் நீங்கள் இவற்றை எமக்கு வந்து சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மட்டும் எடுங்கள். மற்றவற்றை எமது எல்-கஸ்ஸாம் பார்த்துக்கொள்ளும்.”
“ஹமாஸ் உங்களிடம் இறைஞ்சி வேண்டுகிறது. புனித ரமழானில் நீங்கள் யஹுதிகளின் அழிவிற்காக துஆ செய்யுங்கள். எமது நிலங்களை நாங்கள் மீட்க துஆ செய்யுங்கள். எமது சகோதரிகளினதும்இ குழந்தைகளினதும் அநியாயமான இரத்தம் வீணாகாமல் இருக்க துஆ செய்யுங்கள்.
யாரெல்லாம் ஸியோனிஸ்ட்களால் கொல்லப்பட்டார்களோ அவர்களிற்கு பிர்தவ்ஸ் எனும் ஜன்னத் கிடைக்க துஆ செய்யுங்கள். எமது ஆன்மீக தலைவரும் ஹமாஸின் தந்தையுமான சேய்ஹ் அஹ்மத் யாஸீன் (ரஹ்) அவர்கள் எம்மை எல்லாக் கருமங்களிலும் துஆவை கொண்டு ஆரம்பித்து துஆவை கொண்டு முடிக்கும் படி அடிக்கடி பணிப்பார்கள்.
அவர்கள் காட்டிய பாதையில் தான் நாம் பயணிக்கின்றோம். ஒ… முஸ்லிம் உம்மாவே உங்கள் துஆக்களை விட பெரிய ஆயுதம் கஸ்ஸாமிடம் இல்லை. அவற்றை நீங்கள் எங்களிற்காக வழங்குங்கள். ஆமீன். யஹுதியின் அழிவு இதில் இருந்தே ஆரம்பிக்கும் ……”. http://kattankudi.info/

ISIS : தொடரும் மர்மமும் வெளிவரும் திடுக்கிடும் தகவல்களும்… !!

68a3e09e7deee36b65ca4f2f546adc44_XL
Al-Badhdadi

சிரியா, ஈராக் போன்ற நாடுகளின் பல முக்கிய பிரதேசங்களைக் கைப்பற்றி, வேகமாக முன்னேறிக்கொண்டு வந்த ISIS தாம் கைப்பற்றியுள்ள இடங்களில் கிலாபாத்தை அறிவித்திருந்தது.

ஆனாலும் ISIS பற்றிய மர்மம் இன்னும் நீங்காத புதிராகவே இருக்கின்றது. அவர்களிடம் காணப்படும் பெருந்தொகை ஆயுதங்கள், வாகனங்கள் அனைத்தும் எங்கிருந்து கிடைக்கப்பெற்றன போன்ற கேள்விகள் பதில் இல்லாமலேயே இருக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் ISIS பற்றிய ஒரு திடுக்கிடும் தகவலை அமெரிக்க புலனாய்வுப்பிரிவில் பணிபுரிந்து, பின்பு அதன் இரகசியங்களை வெளியிட்ட குற்றங்களுக்காக தேடப்பட்டு வரும் எட்வர்ட் ஸ்நோடன் வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க, பிரித்தானிய, மற்றும் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுகளினால் இணைந்து உருவாக்கப்பட்டதே இந்த ISIS என அவர் தெரிவித்துள்ளார். இத்தகவலை ஸ்நோடன் The Intercept என்ற இணையதளத்திற்கு வழங்கியதாக குவைத்தில் இருந்து வெளியாகும் பிரபல இஸ்லாமிய சஞ்சிகையான “அல் முஜ்தமா” அதன் இணையதளத்தில் பிரசுரித்திள்ளது.
உலகம் பூராகவும் காணப்படும் முஸ்லிம் தீவிரவாதிகள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும் முகமாகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டதாகவும், இத்திட்டத்திற்கு “குளவிக்கூடு” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேலை பாதுகாப்பதே பிரதான குறிக்கோளாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் இஸ்ரேலுக்கு அண்மையில் உள்ள ஒரு நாட்டில் ஒரு அமைப்பை உருவாக்கி, ஆனால் அந்த அமைப்பின் தாக்குதல்கள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகளுக்கே மேற்கொள்ளப்ப்படுமாறு  அமைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலீபாவாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள “அல் பக்தாதி” இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாடிடம் ஒரு வருடம் இராணுவ, பேச்சு போன்ற பயிற்சிகளை ஒரு வருடமாக பெற்றுக்கொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://techislam.com/?p=236

Saturday, July 19, 2014

பண்பாடுகள் இல்லாத தஃவா உயிரற்ற பிணத்தை போல - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

hajjul-akbar
சத்தியத்தை கொண்டு அசத்தியத்தை எதிர்க்க வேண்டும், தன்னிடம் உள்ள சத்தியத்தை கொண்டு மனிதர்களை தாக்குவது இஸ்லாமிய அடிப்படைகளுக்கே முரணானது. பண்பாடுகள் இல்லாத தஃவா உயிரற்ற பிணத்தை போல என்பதை இன்றைய இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாரில்லையேல் சத்தியத்தை கரைத்து குடித்திருந்தாலும் இவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கோ இஸ்லாத்திற்கோ எந்த பிரயோஜனமும் இல்லை.

Friday, July 18, 2014

யார் இந்த யூதர்கள் ? - றிழ்வான்

Friday, 18 July 2014 12:08 // 

    யார் இந்த யூதர்கள்?
    யூதர்களை அறிந்து கொள்ளூங்கள்!! யூதர்கள் பற்றிய அறிவு முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் அல்லாஹுத் தஆலா ஷைத்தான் எமக்கு பகிரங்க எதிரி என்று எச்சரிப்பது போன்றே யூதர்களையும் முஸ்லிம்களின் எதிரி என எச்சரிக்கை செய்துள்ளான்.
    இது எதைக் காட்டுகிறது  எனில் யூதர்களைப் பற்றி ஆரம்பம் முதல் வரலாறு நெடுகிலும் உலக முடிவு வரையும் அவர்களின் சதித் திட்டங்கள் பற்றியும் எமக்கு அறிவு தேவை என்பதையும் அதை நாம் ஆழ ஊடுருவி அறிய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.